முதியவரை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
முதியவரை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
முதியவரை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 02, 2010 01:53 AM
கடலூர் : சொத்து தகராறில் முதியவரை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் வேலு என்கிற சுப்ரமணியன் (55). சமுட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். உறவினர்களான இவர்களுக்குள் சொத்து தகராறு உள்ளது. இதன் காரணமாக கடந்த 28ம் தேதி காலை வயலுக்கு சென்ற சுப்ரமணியை வழிமறித்து ஸ்ரீகாந்த் மற்றும் சசிக்குமார் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீகாந்த் மற்றும் சசிக்குமாரை கைது செய்தனர்.